ஒடிசா மாநிலம் புரியில் ஜெகந்நாதர் கோவில் ரத யாத்திரை ஏற்பாடுகள் இறுதிகட்டத்தை எட்டிவிட்டதாக அம்மாநில முதல்வர் மோகன் சரண் மாஜி தெரிவித்துள்ளார்.
புரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெகந்நாதர் கோவில் ரத யாத்திரையை முன்னிட்டு இரண்டு நாட்கள் அரசு விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவித்தார்.
மேலும், ரத யாத்திரையில் குடியரசுத் தலைவர் பங்கேற்பது வரலாற்றுச் சிறப்புமிக்கது என்றும் ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி கூறியுள்ளார்.