உத்தரகாண்ட் மாநிலம் தாபர்கோர் அருகே, யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலை அருகே ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
இடிபாடுகளை அகற்றி சாலையை சீரமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நிலச்சரிவு தொடர்ந்து ஏற்படுவதால் மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதேபோல், பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையிலும் நிலச்சரிவு காரணமாக போக்குவரத்து தடைபட்டுள்ளது.