குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பாஜக- காங்கிரஸ் தொண்டர்கள் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது.
இந்துக்கள் குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆட்சேபத்துக்குரிய வகையில் பேசியதாக கூறி பாஜக இளைஞர் அணியினர் அகமதாபாத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு சென்ற காங்கிரஸ் தொண்டர்கள் திரண்டனர் இதனையடுத்து இரு கட்சித்தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
ஒருவரையொருவர் கற்களை வீசி, தடியால் தாக்கிக் கொண்டதால் அப்பகுதியே போர்க்களம் போல காட்சியளித்தது. போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.