டி-20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி, நாளை இந்தியா திரும்புகிறது.
அட்லாண்டிக் பெருங்கடலில் உருவான பெரில் சூறாவளி காரணமாக, இந்திய அணி பார்படாஸில் இருந்து நாடு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது.
தற்போது புயல் கரையைக் கடந்து அங்கு இயல்பு நிலை திரும்பியுள்ளதால், இந்தியா அணி நாளை காலை நாடு திரும்புகிறது.
பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா ஏற்பாடு செய்த சிறப்பு விமானம் மூலம் இந்திய வீரர்கள், அவர்களது குடும்பத்தினர், பயிற்சி குழுவினர் என அனைவரும் நாடு திரும்புகின்றனர்.