புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக வட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதானக்கூட்டம் நடைபெற்றது.
வீரமாகாளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா ஜூலை 7ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் கும்பாபிஷேக விழா அழைப்பிதழ் தொடர்பாக இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.
இதனையடுத்து திருமயம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த சமாதானக்கூட்டத்தில் அனைவரும் ஒன்றிணைந்து விழாவினை சிறப்பாக நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. மேலும் எந்த தரப்புக்கும் முதல் மரியாதை வழங்கக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டது.