திருவண்ணாமலை, சிவகங்கை மாவட்டங்களில் சம்பூர்ணதா அபியான் திட்டம் தொடக்கம்!
Aug 2, 2025, 02:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருவண்ணாமலை, சிவகங்கை மாவட்டங்களில் சம்பூர்ணதா அபியான் திட்டம் தொடக்கம்!

Web Desk by Web Desk
Jul 5, 2024, 12:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருவண்ணாமலை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் சம்பூர்ணதா அபியான் எனும் லட்சிய இலக்கு வட்டார மேம்பாட்டுத் திட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட்டது

அனைத்துப் பகுதி மக்களுக்கும் அனைத்தும் கிடைக்கும் வகையில் மத்திய அரசின் சம்பூர்ணதா அபியான் லட்சிய இலக்கு வட்டார மேம்பாட்டுத் திட்டம் இன்று திருவண்ணாமலை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் தொடங்கி வைக்கப்பட்டது

திருவண்ணாமலை மாவட்டத்தில் பழங்குடியின மலைவாழ் மக்கள் அதிகம் வசிக்கும் ஜவ்வாதுமலையில் இந்தத் திட்டத்தை மத்திய அரசின் நித்தி ஆயோக் துணை ஆலோசகர் திரு ஆர். சரவணபவன் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், இத்திட்டம் நாடு முழுவதும் 112 மாவட்டங்களில் 500 வட்டாரப் பகுதிகளில் மத்திய அரசால் செயல்படுத்தப்படுகிறது என்றார்.  இன்று முதல் வரும் 8-ம் தேதி வரை அனைத்து பகுதிகளிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக அவர் கூறினார்.

சுகாதாரம், ஊட்டச்சத்து, கல்வி,விவசாயம் போன்ற அடிப்படை கட்டமைப்பு, சமூக மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்தும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

இன்றைய தொடக்க விழாவில் திட்டத்தின் செயல்பாடுகள் பற்றிய ஒளிப்பதிவுக் காட்சிகளும் திரையிடப்பட்டன.

சம்பூர்ணதா அபியான் உறுதி மொழியும் எடுத்துக்கொள்ளப்பட்டது பின்னர் கையொழுத்து இயக்கம் நடைபெற்றது.

பின்னர் ஜவ்வாதுமலையில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த மகளிருடன் திரு சரவண பவன் கலந்துரையாடினார். அங்கன்வாடி மையங்களுக்கு சென்ற அவர், கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கும் இணை உணவு குறித்தும் ஆய்வு செய்தார்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் “சம்பூர்ணதா அபியான் ” திட்டத்தை சிறப்புத்  திட்ட இயக்குநர்  நிலை அதிகாரி   ரூபேஷ் சிங் குத்துவிளக்கு ஏற்றி  தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், இத்திட்டத்தின் பயன்களை  இவ்வட்டாரத்தில் முழுமையாக எய்திடவும், வட்டாரத்தை ஆரோக்கியமானதாகவும்,  அதிகாரமிக்கதாகவும், வளமிக்கதாகவும் மாற்ற  நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். லட்சிய இலக்கு நிலையிலிருந்து எழுச்சிமிகு நிலைக்கு முன்னேற்றம் காண இத்திட்டப் பணிகள் பயன்படும் என்று திரு ரூபேஷ் சிங் தெரிவித்தார்.

பின்னர்,  வேளாண்மை, மருத்துவம், மகளிர் திட்டத்தின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கைவினைப் பொருட்கள் கண்காட்சியை அவர் பார்வையிட்டார்.

Tags: sivagangaSampoornatha AbhiyanNiti Aayog Deputy Advisortiruvannamalai
ShareTweetSendShare
Previous Post

2024 பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்தியக் குழுவினருடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்!

Next Post

நாகர்கோயில் அருகே நகை மோசடியில் ஈடுபட்ட பெண் கைது!

Related News

இராமநாதபுரம் : கடற்கரையில் மண் எடுப்பதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு!

போலீசார் தாக்கி மூதாட்டி உயிரிழந்த விவகாரம் : உடலை உடற்கூறு ஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

எதிர்கால சந்ததியினரை காக்கவே இந்த நடைபயணம் : அன்புமணி

மதிமுகவில் துரை வைகோவிற்காக கட்சியின் மூத்த தலைவர்கள் ஓரங்கட்டப்படுகின்றனர் – மல்லை சத்யா குற்றச்சாட்டு!

தொழிலாளர்கள் நலனில் : அக்கறை மத்திய அரசின் அசத்தல் திட்டம்!

கன்னியாகுமரி : முன்னாள் எம்எல்ஏ தமிமுன் அன்சாரி வருகைக்கு எதிர்ப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

புரோ கபடி லீக் – அட்டவணை வெளியீடு!

மதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி நிதி முறைகேடு : மேலும் இரண்டு பேர் கைது!

முதல் டி20 போட்டி : பாகிஸ்தான் அணி வெற்றி!

சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சரின் மகனை கைது செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

நீலகிரி : லாரி சாலையில் கவிழ்ந்து விபத்து – ஓட்டுநர் மருத்துவமனையில் அனுமதி!

செங்கல்பட்டு : கட்டுமான பணி நடைபெறும் இடத்தில் இரும்பு பொருள் திருட்டு!

லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் : தென்னாப்பிரிக்கா சாம்பியன்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்!

திருப்பூர் : வனச்சரக அலுவலகத்தில் விசாரணை கைதி தற்கொலை? : புகைப்படம் வெளியீடு!

திருவள்ளூர் : திமுகவினருக்கு ஆதரவாக செயல்படும் ஆவடி மேயர்!

நீலகிரியில் விவசாயம் செழிக்க வேண்டி படுகர் இன மக்கள் சிறப்பு வழிபாடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies