திருவண்ணாமலை, சிவகங்கை மாவட்டங்களில் சம்பூர்ணதா அபியான் திட்டம் தொடக்கம்!
Nov 4, 2025, 01:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருவண்ணாமலை, சிவகங்கை மாவட்டங்களில் சம்பூர்ணதா அபியான் திட்டம் தொடக்கம்!

Web Desk by Web Desk
Jul 5, 2024, 12:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருவண்ணாமலை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் சம்பூர்ணதா அபியான் எனும் லட்சிய இலக்கு வட்டார மேம்பாட்டுத் திட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட்டது

அனைத்துப் பகுதி மக்களுக்கும் அனைத்தும் கிடைக்கும் வகையில் மத்திய அரசின் சம்பூர்ணதா அபியான் லட்சிய இலக்கு வட்டார மேம்பாட்டுத் திட்டம் இன்று திருவண்ணாமலை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் தொடங்கி வைக்கப்பட்டது

திருவண்ணாமலை மாவட்டத்தில் பழங்குடியின மலைவாழ் மக்கள் அதிகம் வசிக்கும் ஜவ்வாதுமலையில் இந்தத் திட்டத்தை மத்திய அரசின் நித்தி ஆயோக் துணை ஆலோசகர் திரு ஆர். சரவணபவன் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், இத்திட்டம் நாடு முழுவதும் 112 மாவட்டங்களில் 500 வட்டாரப் பகுதிகளில் மத்திய அரசால் செயல்படுத்தப்படுகிறது என்றார்.  இன்று முதல் வரும் 8-ம் தேதி வரை அனைத்து பகுதிகளிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக அவர் கூறினார்.

சுகாதாரம், ஊட்டச்சத்து, கல்வி,விவசாயம் போன்ற அடிப்படை கட்டமைப்பு, சமூக மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்தும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

இன்றைய தொடக்க விழாவில் திட்டத்தின் செயல்பாடுகள் பற்றிய ஒளிப்பதிவுக் காட்சிகளும் திரையிடப்பட்டன.

சம்பூர்ணதா அபியான் உறுதி மொழியும் எடுத்துக்கொள்ளப்பட்டது பின்னர் கையொழுத்து இயக்கம் நடைபெற்றது.

பின்னர் ஜவ்வாதுமலையில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த மகளிருடன் திரு சரவண பவன் கலந்துரையாடினார். அங்கன்வாடி மையங்களுக்கு சென்ற அவர், கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கும் இணை உணவு குறித்தும் ஆய்வு செய்தார்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் “சம்பூர்ணதா அபியான் ” திட்டத்தை சிறப்புத்  திட்ட இயக்குநர்  நிலை அதிகாரி   ரூபேஷ் சிங் குத்துவிளக்கு ஏற்றி  தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், இத்திட்டத்தின் பயன்களை  இவ்வட்டாரத்தில் முழுமையாக எய்திடவும், வட்டாரத்தை ஆரோக்கியமானதாகவும்,  அதிகாரமிக்கதாகவும், வளமிக்கதாகவும் மாற்ற  நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். லட்சிய இலக்கு நிலையிலிருந்து எழுச்சிமிகு நிலைக்கு முன்னேற்றம் காண இத்திட்டப் பணிகள் பயன்படும் என்று திரு ரூபேஷ் சிங் தெரிவித்தார்.

பின்னர்,  வேளாண்மை, மருத்துவம், மகளிர் திட்டத்தின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கைவினைப் பொருட்கள் கண்காட்சியை அவர் பார்வையிட்டார்.

Tags: tiruvannamalaisivagangaSampoornatha AbhiyanNiti Aayog Deputy Advisor
ShareTweetSendShare
Previous Post

2024 பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்தியக் குழுவினருடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்!

Next Post

நாகர்கோயில் அருகே நகை மோசடியில் ஈடுபட்ட பெண் கைது!

Related News

GST 2.0-சூப்பர் ரிசல்ட் : தீபாவளி விற்பனை ரூ.6 லட்சம் கோடி!

டெல்லியில் தாலிபான் துாதர் நியமனம் : இந்தியாவை பாராட்டி தள்ளும் தாலிபான்கள்!

DRDO-வின் அசாதாரண முயற்சியால் உருவான RUDRAM-1 ஏவுகணை!

இனி எல்லாமே ஈஸி : விரைவில் அறிமுகமாகிறது ஆதார் செயலி!

உலகக் கோப்பையை வென்ற “Women in Blue” : 47 வருட கனவு நிறைவேறியது எப்படி?

புகைக்கு “குட் பை” : மலைக்க வைக்கும் மாலத்தீவுகள்!

Load More

அண்மைச் செய்திகள்

புதிய டிஜிட்டல் புரட்சியாக உருவெடுத்து கவனம் ஈர்க்கும் VREELS செயலி!

ஸ்ரீகாக்குளம் கோயில் கூட்ட நெரிசல் 9 பேர் பலியான சோகம்!

விண்வெளித்துறையில் “பாகுபலி மொமன்ட்” – CMS-03 செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம் – சிறப்பு தொகுப்பு!

தெலங்கானாவில் 20 பேரின் உயிரை பலிவாங்கிய கோர விபத்து!

‘வைப்ரன்ஸ் மொபைல் செயலி’ : +2 மாணவி உருவாக்கிய செயலிக்கு வரவேற்பு!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில் திமுக நிர்வாகிகள் : கராத்தே தியாகராஜன் குற்றச்சாட்டு!

மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார் ஆளுநர் ஆர்.என்.ரவி!

பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக ஆட்சி தவறிவிட்டது – அண்ணாமலை

ஆயுர்வேதம், மனிதகுலத்திற்கு இந்தியா அளித்த மிகச்சிறந்த பரிசு – பிரதாப் ரெட்டி

மனித குலத்தின் பேரழிவாக உருவெடுக்கும் 2026-ம் ஆண்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies