திருவண்ணாமலை, சிவகங்கை மாவட்டங்களில் சம்பூர்ணதா அபியான் திட்டம் தொடக்கம்!
Jun 14, 2026, 08:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருவண்ணாமலை, சிவகங்கை மாவட்டங்களில் சம்பூர்ணதா அபியான் திட்டம் தொடக்கம்!

Murugesan M by Murugesan M
Jul 5, 2024, 12:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருவண்ணாமலை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் சம்பூர்ணதா அபியான் எனும் லட்சிய இலக்கு வட்டார மேம்பாட்டுத் திட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட்டது

அனைத்துப் பகுதி மக்களுக்கும் அனைத்தும் கிடைக்கும் வகையில் மத்திய அரசின் சம்பூர்ணதா அபியான் லட்சிய இலக்கு வட்டார மேம்பாட்டுத் திட்டம் இன்று திருவண்ணாமலை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் தொடங்கி வைக்கப்பட்டது

திருவண்ணாமலை மாவட்டத்தில் பழங்குடியின மலைவாழ் மக்கள் அதிகம் வசிக்கும் ஜவ்வாதுமலையில் இந்தத் திட்டத்தை மத்திய அரசின் நித்தி ஆயோக் துணை ஆலோசகர் திரு ஆர். சரவணபவன் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், இத்திட்டம் நாடு முழுவதும் 112 மாவட்டங்களில் 500 வட்டாரப் பகுதிகளில் மத்திய அரசால் செயல்படுத்தப்படுகிறது என்றார்.  இன்று முதல் வரும் 8-ம் தேதி வரை அனைத்து பகுதிகளிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக அவர் கூறினார்.

சுகாதாரம், ஊட்டச்சத்து, கல்வி,விவசாயம் போன்ற அடிப்படை கட்டமைப்பு, சமூக மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்தும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

இன்றைய தொடக்க விழாவில் திட்டத்தின் செயல்பாடுகள் பற்றிய ஒளிப்பதிவுக் காட்சிகளும் திரையிடப்பட்டன.

சம்பூர்ணதா அபியான் உறுதி மொழியும் எடுத்துக்கொள்ளப்பட்டது பின்னர் கையொழுத்து இயக்கம் நடைபெற்றது.

பின்னர் ஜவ்வாதுமலையில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த மகளிருடன் திரு சரவண பவன் கலந்துரையாடினார். அங்கன்வாடி மையங்களுக்கு சென்ற அவர், கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கும் இணை உணவு குறித்தும் ஆய்வு செய்தார்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் “சம்பூர்ணதா அபியான் ” திட்டத்தை சிறப்புத்  திட்ட இயக்குநர்  நிலை அதிகாரி   ரூபேஷ் சிங் குத்துவிளக்கு ஏற்றி  தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், இத்திட்டத்தின் பயன்களை  இவ்வட்டாரத்தில் முழுமையாக எய்திடவும், வட்டாரத்தை ஆரோக்கியமானதாகவும்,  அதிகாரமிக்கதாகவும், வளமிக்கதாகவும் மாற்ற  நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். லட்சிய இலக்கு நிலையிலிருந்து எழுச்சிமிகு நிலைக்கு முன்னேற்றம் காண இத்திட்டப் பணிகள் பயன்படும் என்று திரு ரூபேஷ் சிங் தெரிவித்தார்.

பின்னர்,  வேளாண்மை, மருத்துவம், மகளிர் திட்டத்தின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கைவினைப் பொருட்கள் கண்காட்சியை அவர் பார்வையிட்டார்.

Tags: tiruvannamalaisivagangaSampoornatha AbhiyanNiti Aayog Deputy Advisor
ShareTweetSendShare
Previous Post

2024 பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்தியக் குழுவினருடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்!

Next Post

நாகர்கோயில் அருகே நகை மோசடியில் ஈடுபட்ட பெண் கைது!

Related News

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies