திண்டுக்கல் மாவட்டம், பழனியில் கஞ்சா புகைத்துவிட்டு இன்ஸ்டாவில் ரீல்ஸ் பதிவிட்ட இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பழனி தேவஸ்தான சிறுவர் பூங்காவில் கஞ்சா புகைத்த இளைஞர்கள் சிலர் போதையில் ரீல்ஸ் செய்து பதிவிட்டனர்.
பின்னர் இந்த வீடியோ வைரலாகி கஞ்சாவால் இளைஞர்கள் சீரழிவது பேசுபொருளானது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 6 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தலைமறைவாக உள்ள மேலும் நால்வரையும் தேடி வருகின்றனர். இந்நிலையில் கைதானவர்கள் மூலமே கஞ்சா புகைக்க வேண்டாம் எனும் வீடியோவை பதிவிட வைத்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்.