உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸில் கூட்ட நெரிசலில் சிக்கி, 121 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, விழாவை ஏற்பாடு செய்த சாமியாரின் உதவியாளரை 14 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஹத்ராஸில் நடைபெற்ற மத நிகழ்ச்சியில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, 121 பேர் உயிரிழந்தனர். இந்த நிகழ்வுக்கு காரணமான போலே பாபா சாமியாரின் உதவியாளர் தேவ் பிரகாஷ் மதுக்கர் டெல்லியில் பதுங்கியிருந்தபோது போலீசாரிடம் சிக்கினார்.
பின்னர், ஹத்ராஸ் அழைத்து வரப்பட்ட அவரை, 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.