ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆர் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு மத்திய இணை அமைச்சர் எல். முருகன் அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் செய்தியாளரிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் எல். முருகன்,
சமூக சேவையில் ஈடுபட்டு பல இளம் வழக்கறிஞர்களை உருவாக்கியுள்ளார் ஆம்ஸ்ட்ராங். சமூகவிரோதிகளால் கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சி அளிகிறது. ஒரு தேசிய கட்சியின் மாநிலத் தலைவருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை தமிழகத்தில் நிலவி வருகிறது எனக் குற்றம் சாட்டினார்.
தமிழகத்தில் 2 மாதத்திற்கு முன் காங்கிரஸ் மாவட்ட தலைவர் எரித்து கொலை செய்யப்பட்டார். இதற்கு முன்பு அதிமுக நிர்வாகி ஒருவர் ஓட ஓட வெட்டப்பட்டார்.
ஆம்ஸ்ட்ராங் படுகொலை என்பது அரசாங்கத்தின் தோல்வியை காட்டுகிறது என்றும் திமுக ஸ்டாலின் அரசு கையாலாகாத தனத்தை, தோல்வியை காட்டுகிறது எனத் தெரிவித்தார்.
சட்டங்களை கையில் வைத்துள்ள முதலமைச்சர் இதற்கெல்லாம் பொறுப்பேற்க வேண்டும் எனத் தெரிவித்தார். சென்னையில் தான் இது போன்று நடந்து வருகிறது. இந்த கொலைக்கு தமிழக முதலமைச்சர் முழு பொறுப்பேற்க வேண்டும். தமிழக அரசு சட்ட ஒழுங்கை ஒரு துளி கூட மதிக்கவில்லை. இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் எனத்தெரிவித்தார்.