பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட நிலையில், தமிழக அரசுக்கு பாஜக தேசிய தலைவரும், மத்திய அமைச்சருமான ஜெ.பி.நட்டா கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ஆம்ஸ்ட்ராங் படுகொலை தேசம் முழுவதும் கோபத்தை ஏற்படுத்தியிருப்பதாக தெரிவித்துள்ளார்.
சமுதாயத்தின் விளிம்புநிலை மக்கள் அதிகாரம் பெறுவதற்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்த இளம் தலைவரின் உயிர், கொடூரமான முறையில் பறிக்கப்பட்டிருப்பதாக அந்தப் பதிவில் ஜெ.பி.நட்டா வேதனை தெரிவித்துள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய நபர்களை தமிழக அரசு துரிதமாக தண்டிக்க வேண்டும் என்றும் ஜெ.பி.நட்டா வலியுறுத்தியுள்ளார்.
ஏழைகள் மற்றும் விளிம்புநிலை மக்களை திமுக- காங்கிரஸ் கூட்டணி அலட்சியமாக நடத்துவதை ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்துவதாகவும்,
ஏற்கனவே கள்ளச்சாராய சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் விளிம்புநிலை சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்தான் என்றும் அந்தப் பதிவில் ஜெ.பி.நட்டா மேற்கோள் காட்டியுள்ளார்.
24 மணிநேரமும் அற்ப அரசியலில் ஈடுபடுவதை தவிர்த்து, ஏழைகள் மீது திமுக- காங்கிரஸ் கூட்டணி இரக்கம் காட்ட வேண்டுமென பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா வலியுறுத்தியுள்ளார்.