குஜராத் மாநிலம் சூரத்தில் நான்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கினர்.
சூரத்தின் சச்சின் பகுதியில் நான்கு மாடி கட்டடம் சீட்டுக்கட்டை போல திடீரென இடிந்து விழுந்தது. இதில் அந்தக் கட்டடத்தில் இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.
தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர், இடிபாடுகளை அகற்றி மீட்பு பணியில் துரிதமாக ஈடுபட்டு வருகின்றனர்.