ஆர்ம்ஸ்ட்ராங் கொடூரமாக கொலை பின்னணி என்ன?
Mar 19, 2026, 06:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆர்ம்ஸ்ட்ராங் கொடூரமாக கொலை பின்னணி என்ன?

Murugesan M by Murugesan M
Jul 6, 2024, 09:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அடிக்கடி உச்சரிக்கப்படுகிறது ரவுடி ஆற்காடு சுரேஷின் பெயர். இருவருக்கும் என்ன தொடர்பு? உண்மையிலேயே ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்குப்பழியாக கொல்லப்பட்டாரா ஆர்ம்ஸ்ட்ராங்? விரிவாக பார்க்கலாம்.

சென்னை பெரம்பூரில் தமது வீட்டுக்கு அருகிலேயே 6 பேர் கொண்ட கும்பலால் சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்டார் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங். இருசக்கர வாகனத்தில் உணவு டெலிவரி BOY உடையணிந்து வந்தவர்கள் ஆர்ம்ஸ்ட்ராங்கை கொடூரமாக கொலை செய்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக, கடந்தாண்டு கொலை செய்யப்பட்ட பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் சகோதரர் புன்னை பாலு உள்ளிட்ட 8 பேர் சரணடைந்துள்ளனர். அவர்களில் ஒருவரான ஆட்டோ ஓட்டுநரும் சரித்திர பதிவேடு குற்றவாளியுமான திருமலைதான் ஆர்ம்ஸ்ட்ராங் கொலைக்கு திட்டம் போட்டு கொடுத்ததாக தெரிகிறது.

ஒருவாரமாக ஆர்ம்ஸ்ட்ராங் வீடு அருகே ஆட்டோவை நிறுத்துவது போல திருமலை நோட்டம் பார்த்ததாக கூறப்படுகிறது. ஆர்ம்ஸ்ட்ராங் எப்போது எப்படி வருகிறார்? எவ்வளவு நேரம் அங்கு இருக்கிறார்? அவரோடு எத்தனை பேர் வருகிறார்கள்? என்பதையெல்லாம் அறிந்து சொன்னவர் திருமலை என்கிறது காவல்துறை வட்டாரம்.

எனினும் இதுபற்றி அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியாகவில்லை. ஆர்ம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், இதற்கு பின்னால் அரசியல் காரணம் இருப்பதாக தெரியவில்லை என்று தெரிவித்தார்.

முழு விவரம் தெரிந்த பிறகே அனைத்து தகவல்களையும் சொல்லுவோம் என்று காவல் ஆணையர் கூறினாலும், ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ரவுடி ஆற்காடு சுரேஷின் பெயர் பலமாக அடிபடுகிறது. ஆர்ம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக சுரேஷின் சகோதரர் புன்னை பாலு சரண் அடைந்திருப்பதே அதற்கு காரணம். கடந்த ஆகஸ்ட் மாதம் 18-ஆம் தேதி சென்னை பட்டினப்பாக்கத்தில் படுகொலை செய்யப்பட்டார் ஆற்காடு சுரேஷ்.

முப்பதுக்கும் அதிகமான குற்ற வழக்குகளில் தொடர்புடைய ஆற்காடு சுரேஷ், அரசு ஊழியராக தமது வாழ்க்கையை தொடங்கியவர் என்று சொன்னால் நம்புவதற்கு சற்று சிரமமாக இருக்கும். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் காவலராக பணிபுரிவதற்காக ஆற்காட்டிலிருந்து சென்னை புளியந்தோப்பு பகுதிக்கு வந்தார் சுரேஷ். அரசு வேலையோடு சேர்த்து கந்துவட்டிக்கும் கடன் கொடுத்ததால் பிரச்னைகளும் பஞ்சாயத்துகளும் வரிசைகட்டத் தொடங்கின. 1998-ஆம் ஆண்டு ஆள்கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைக்குச் சென்ற சுரேஷுக்கு ரவுடிகளின் தொடர்பு கிடைத்தது.

ஆள்கடத்தலை தொடர்ந்து செம்மரக் கடத்தலிலும் ஈடுபட்டதால் சுரேஷின் NETWORK ஆந்திரா வரை நீண்டது. தனி கூலிப்படையுடன் அட்ராசிட்டியைத் தொடங்கிய சுரேஷ் அதன் பலனாக பிற ரவுடிகளின் பகையையும் கொலை வழக்குகளையும் பெற்றுக்கொண்டார். அந்த நேரத்தில் கஞ்சா வியாபாரத்தில் கொடிகட்டிப் பறந்த பெண் தாதா கஞ்சா அஞ்சலையுடன் சுரேஷுக்கு தொடர்பு இருந்தது. இந்த நிலையில் பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகியும் சென்னை புளியந்தோப்பைச் சேர்ந்த பிரபல ரவுடியுமான தென்னரசுவுக்கும் சுரேஷுக்கும் இடையே நிலத்தகராறு ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக 2010-ஆம் ஆண்டு தென்னரசுவின் கூட்டாளியான ரவுடி சின்னாவையும், வழக்கறிஞர் பகத்சிங் என்பவரையும் கொலை செய்தார் ஆற்காடு சுரேஷ்.

அதற்கு பழிவாங்குவதற்காக சுரேஷின் நண்பரான வெள்ளை உமா என்பவரை தென்னரசு தரப்பு கொலை செய்தது. அதனைத் தொடர்ந்து 2015-ல் குடும்பத்தினர் முன்னிலைலேயே தென்னரசுவின் முகத்தை சிதைத்து கொலை செய்தது சுரேஷ் தரப்பு. 8 ஆண்டுகள் கழித்து 2023-ல் சென்னை பட்டினப்பாக்கத்தில் முகத்தை சிதைத்து கொலை செய்யப்பட்டார் ஆற்காடு சுரேஷ். தென்னரசுவின் சகோதரர் ரவுடி பாம் சரவணன்தான் அதற்கு காரணம் என்று சொல்லப்பட்டது. சுரேஷ் கொலையில் ஆர்ம்ஸ்ட்ராங்குக்கு தொடர்பு இருக்கலாம் என அவரது கூட்டாளிகள் சந்தேகித்ததாக தெரிகிறது. இதற்கிடையே சுரேஷின் நண்பரான ரவுடி மாதவனும் கொல்லப்பட்டது அவரது ஆதரவாளர்களின் ஆத்திரத்தை அதிகப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இந்த பின்னணியில் சுரேஷின் பிறந்தநாளான ஜூலை 5-ஆம் தேதி ஆர்ம்ஸ்ட்ராங்கை கொலை செய்து தங்கள் பழியை அவர்கள் தீர்த்துக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆற்காடு சுரேஷின் கொலை வழக்கில் ஆர்ம்ஸ்ட்ராங்கின் பெயர் சேர்க்கப்படவில்லை என்பது நினைவுகூறத்தக்கது.

Tags: What is the background of Armstrong's brutal murder?
ShareTweetSendShare
Previous Post

கெயர் ஸ்டாமர் வெற்றியின் ரகசியம்!

Next Post

பிரிட்டன் தேர்தல் வெற்றி வாகை சூடிய இந்தியர்கள்!

Related News

ஈரான் போர் யுக்தியால் கவரப்பட்ட இந்தியா : ட்ரோன் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த முடிவு – சிறப்பு கட்டுரை!

நாடு முழுவதும் 100 தொழிற் பூங்கா அமைக்க 33, 660 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

உலக தண்ணீர் தினம் – காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் திருச்சியில் வரும் 22 ஆம் தேதி கருத்தரங்கம்!

I-PAC அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்த விவகாரம் – மேற்குவங்க முதல்வருக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!

கேஸ் சிலிண்டர்கள் கேட்டு விநியோக மையங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம் – மத்திய அரசு

வாரணாசியில் படகில் இப்தார் விருந்து – அசைவ உணவுகளை கங்கையில் வீசிய 14 பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரானுக்கு மனிதாபிமான அடிப்படையில் மருத்துவ பொருட்களை அனுப்பியது இந்தியா!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – 74 திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு போட்டியிட வாய்ப்பு மறுப்பு!

ஈரான் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியது இஸ்ரேல் : ஈரான் செயல் தலைவர் அலி லாரிஜானி கொலை – சிறப்பு தொகுப்பு!

தமிழகத்தில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் : நிர்பயா நிதியை முழுமையாக செலவு செய்யாத திமுக அரசு – சிறப்பு தொகுப்பு!

ராஜ்யசபாவில் பெரும்பான்மை பெற்ற NDA : ஓங்கிய பாஜகவின் பலம் – சிறப்பு தொகுப்பு!

நலிவின் விளிம்பில் தமிழக ஜவுளித்துறை : மின் கட்டண உயர்வால் கதறும் தொழில்துறையினர்- சிறப்பு கட்டுரை!

நயினார் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் திமுக முனனாள் மாநில நிர்வாகி ஆர்.கே.வி. ராஜா!

லஞ்ச ஒழிப்புத்துறைக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – அடுத்த வாரம் பட்டியலிடப்படும் என தகவல்!

தமிழக ரயில்வே திட்டங்களுக்கு மாநில அரசு ஒத்துழைப்பு அளிப்பதில்லை – அஷ்வினி வைஷ்ணவ் குற்றச்சாட்டு!

நாடாளுமன்றம் செயல்படும் நாட்களை அதிகரிக்க வேண்டும் – மல்லிகார்ஜுன கார்கே

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies