காலிஸ்தானுக்கே ஆதரவு!: சிறையிலிருக்கும் சீக்கிய எம்பி கருத்தால் சர்ச்சை!
Aug 24, 2025, 12:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காலிஸ்தானுக்கே ஆதரவு!: சிறையிலிருக்கும் சீக்கிய எம்பி கருத்தால் சர்ச்சை!

Web Desk by Web Desk
Jul 9, 2024, 08:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காலிஸ்தான் பிரிவினைவாத நாடாளுமன்ற உறுப்பினர் அம்ரித்பால் சிங், தம்மை காலிஸ்தான் கொள்கை கொண்டவர் அல்ல என்று கூறியதற்காக தனது தாயை விமர்சித்திருக்கிறார். குடும்பத்தை விடவும் காலிஸ்தானே தனக்கு முக்கியம் என்று அவர் கூறியிருப்பது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த ஒரு செய்தி தொகுப்பு.

காலிஸ்தான் பிரிவினைவாதியான அம்ரித்பால் சிங், இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டு வந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது. காலிஸ்தான் இயக்கத்தில் ஈடுபட்டதற்காக அவர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் (என்எஸ்ஏ) கீழ் வழக்கு பதிவு செய்யப் பட்டது.

அதன் தொடர்ச்சியாக, நீண்ட காலம் தலைமறைவாக இருந்த அம்ரித்பால் சிங், பஞ்சாப் மாநில அரசால் கைது செய்யப்பட்டார். அஸ்ஸாமில் உள்ள திப்ருகர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அம்ரித்பால் சிங், சிறையில் இருந்தபடியே மக்களவை தேர்தலில் பஞ்சாபின் கதூர் சாஹிப் தொகுதியில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார்.

பஞ்சாப் மாநிலத்துக்குள் செல்ல கூடாது, ஊடகங்கள் உட்பட யாருடனும் தொடர்பு கொள்ளக்கூடாது போன்ற பல நிபந்தனைகளுடன் நீதிமன்ற உத்தரவின் பேரில், மக்களவை உறுப்பினராக பதவியேற்பதற்காக நான்கு நாட்கள் பரோலில் விடுவிக்கப்பட்டார். பதவியேற்பு விழாவுக்காக டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர், பதவியேற்ற உடனேயே மீண்டும் திப்ருகர் சிறைக்கு அனுப்பப்பட்டார்.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை, அம்ரித்பால் சிங்கின் தாயார் பல்விந்தர் கவுர், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அம்ரித்பால் சிங் ஒரு காலிஸ்தான் இயக்க ஆதரவாளர் அல்ல என்றும், அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அம்ரித்பால் சிங்கின் தாயார் பல்விந்தர் கவுர் தெரிவித்த இந்த கருத்துக்கள் பரபரப்பாக பேசப் பட்டது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், அம்ரித்பால் சிங்குக்கு ஆதரவு திரட்டிய மற்றும் அவருக்கு வாக்களித்த காலிஸ்தான் ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தனது தாயாரின் காலிஸ்தான் விரோத கருத்துக்கு, சிறையிலிருக்கும் அமிர்தபால் சிங் மறுப்பு தெரிவித்திருக்கிறார்.

தனது தாயை விமர்சித்து அம்ரித்பால் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், கல்சா ராஜ் கனவு காண்பது குற்றம் அல்ல, என்றும் அது பெருமைக்குரியது என்றும் கூறியிருக்கிறார்.

மேலும், லட்சக்கணக்கான சீக்கியர்கள் தங்கள் உயிர்களை தியாகம் செய்த பாதையில் இருந்து பின்வாங்குவது பற்றி நினைத்துக்கூட பார்க்க முடியாது என்றும், சீக்கியர்கள் சமரசம் செய்துகொள்வதைப் பற்றி ஒருபோதும் நினைக்க வேண்டாம் என்றும் தெரிவித்திருக்கிறார்.

இதனையடுத்து, அமிர்த் பால் சிங்கின் தாயார், தாம் சொன்னதை ஊடகங்கள் திரித்து வெளியிட்டு விட்டதாக குற்றஞ்சாட்டி உள்ளார். ஊடகங்கள் உண்மைகளைத் தவறாக சித்தரிப்பதையே வழக்கமாக கொண்டிருக்கின்றன. எனவே, காலிஸ்தான் ஆதரவாளர்கள் தனது பேச்சை வேறுவிதமாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

Tags: Support for Khalistan!: Controversy over the opinion of the imprisoned Sikh MP!
ShareTweetSendShare
Previous Post

பிரான்ஸ் தேர்தல் இடதுசாரி வெற்றி வெடித்தது வன்முறை!

Next Post

ரஷ்யாவுடன் இந்தியா நெருக்கம் காட்டுவது ஏன்? புவிசார் அரசியல் மாறுகிறதா?

Related News

ஊழியரை மதுபோதையில் தாக்கியதாக குற்றச்சாட்டு – கோவிலம்பாக்கம் ஊராட்சி செயலர் பணியிடை நீக்கம்!

கூடலூர் அருகே குடியிருப்பு பகுதியின் சுற்றுச்சுவரை இடித்து சேதப்படுத்திய காட்டு யானை!

மசினகுடி அருகே உடல் மெலிந்த நிலையில் சுற்றித் திரியும் புலி – தீவிர கண்காணிப்பு பணியில் வனத்துறையினர்!

பாரிவேந்தர் பிறந்த நாள் – தலைவர்கள் வாழ்த்து!

பல்லாவரம் அருகே மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் ரவுடி வெட்டி கொலை!

உலக ஐயப்ப சங்கமம் மாநாட்டில் பங்கேற்க ஸ்டாலினுக்கு அழைப்பு – பாஜக கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லி வந்த பிஜி பிரதமருக்கு உற்சாக வரவேற்பு!

நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை – ஒகேனக்கல் காவிரி ஆற்றின் நீர்வரத்து 16000 கன அடியாக உயர்வு!

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் அருகே பேட்டரி கார் அணிவகுப்பு!

திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் உரிய வசதிகள் இல்லாதது குறித்த கேள்வி – திணறிய சுகாதாரத்துறை அமைச்சர்!

அதிமுக ஆட்சியில் சிறுபான்மையினருக்கு பல்வேறு திட்டங்கள் – இபிஎஸ் பேச்சு

ரணில் விக்ரமசிங்கே கைது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை – சசிதரூர் கண்டனம்!

ராகுல் காந்தி காலிஸ்தான்களுடன் இணைந்து செயல்படுகிறார் – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

புதிய உச்சத்தில் நட்புறவு : இந்திய ஏற்றுமதிக்கு ரஷ்யா க்ரீன் சிக்னல் – சிறப்பு கட்டுரை!

பெட்ரோல், டீசலை ஓரம் கட்டுங்க : 100% எத்தனாலில் இயங்கும் வாகனங்களை அறிமுகப்படுத்துங்க – சிறப்பு கட்டுரை!!

தென்மேற்கு பருவமழை இயல்பை விட 9 % அதிகமாக பெய்துள்ளது – வானிலை ஆய்வு மையம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies