காலிஸ்தானுக்கே ஆதரவு!: சிறையிலிருக்கும் சீக்கிய எம்பி கருத்தால் சர்ச்சை!
Aug 4, 2026, 08:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காலிஸ்தானுக்கே ஆதரவு!: சிறையிலிருக்கும் சீக்கிய எம்பி கருத்தால் சர்ச்சை!

Murugesan M by Murugesan M
Jul 9, 2024, 08:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காலிஸ்தான் பிரிவினைவாத நாடாளுமன்ற உறுப்பினர் அம்ரித்பால் சிங், தம்மை காலிஸ்தான் கொள்கை கொண்டவர் அல்ல என்று கூறியதற்காக தனது தாயை விமர்சித்திருக்கிறார். குடும்பத்தை விடவும் காலிஸ்தானே தனக்கு முக்கியம் என்று அவர் கூறியிருப்பது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த ஒரு செய்தி தொகுப்பு.

காலிஸ்தான் பிரிவினைவாதியான அம்ரித்பால் சிங், இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டு வந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது. காலிஸ்தான் இயக்கத்தில் ஈடுபட்டதற்காக அவர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் (என்எஸ்ஏ) கீழ் வழக்கு பதிவு செய்யப் பட்டது.

அதன் தொடர்ச்சியாக, நீண்ட காலம் தலைமறைவாக இருந்த அம்ரித்பால் சிங், பஞ்சாப் மாநில அரசால் கைது செய்யப்பட்டார். அஸ்ஸாமில் உள்ள திப்ருகர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அம்ரித்பால் சிங், சிறையில் இருந்தபடியே மக்களவை தேர்தலில் பஞ்சாபின் கதூர் சாஹிப் தொகுதியில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார்.

பஞ்சாப் மாநிலத்துக்குள் செல்ல கூடாது, ஊடகங்கள் உட்பட யாருடனும் தொடர்பு கொள்ளக்கூடாது போன்ற பல நிபந்தனைகளுடன் நீதிமன்ற உத்தரவின் பேரில், மக்களவை உறுப்பினராக பதவியேற்பதற்காக நான்கு நாட்கள் பரோலில் விடுவிக்கப்பட்டார். பதவியேற்பு விழாவுக்காக டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர், பதவியேற்ற உடனேயே மீண்டும் திப்ருகர் சிறைக்கு அனுப்பப்பட்டார்.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை, அம்ரித்பால் சிங்கின் தாயார் பல்விந்தர் கவுர், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அம்ரித்பால் சிங் ஒரு காலிஸ்தான் இயக்க ஆதரவாளர் அல்ல என்றும், அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அம்ரித்பால் சிங்கின் தாயார் பல்விந்தர் கவுர் தெரிவித்த இந்த கருத்துக்கள் பரபரப்பாக பேசப் பட்டது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், அம்ரித்பால் சிங்குக்கு ஆதரவு திரட்டிய மற்றும் அவருக்கு வாக்களித்த காலிஸ்தான் ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தனது தாயாரின் காலிஸ்தான் விரோத கருத்துக்கு, சிறையிலிருக்கும் அமிர்தபால் சிங் மறுப்பு தெரிவித்திருக்கிறார்.

தனது தாயை விமர்சித்து அம்ரித்பால் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், கல்சா ராஜ் கனவு காண்பது குற்றம் அல்ல, என்றும் அது பெருமைக்குரியது என்றும் கூறியிருக்கிறார்.

மேலும், லட்சக்கணக்கான சீக்கியர்கள் தங்கள் உயிர்களை தியாகம் செய்த பாதையில் இருந்து பின்வாங்குவது பற்றி நினைத்துக்கூட பார்க்க முடியாது என்றும், சீக்கியர்கள் சமரசம் செய்துகொள்வதைப் பற்றி ஒருபோதும் நினைக்க வேண்டாம் என்றும் தெரிவித்திருக்கிறார்.

இதனையடுத்து, அமிர்த் பால் சிங்கின் தாயார், தாம் சொன்னதை ஊடகங்கள் திரித்து வெளியிட்டு விட்டதாக குற்றஞ்சாட்டி உள்ளார். ஊடகங்கள் உண்மைகளைத் தவறாக சித்தரிப்பதையே வழக்கமாக கொண்டிருக்கின்றன. எனவே, காலிஸ்தான் ஆதரவாளர்கள் தனது பேச்சை வேறுவிதமாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

Tags: Support for Khalistan!: Controversy over the opinion of the imprisoned Sikh MP!
ShareTweetSendShare
Previous Post

பிரான்ஸ் தேர்தல் இடதுசாரி வெற்றி வெடித்தது வன்முறை!

Next Post

ரஷ்யாவுடன் இந்தியா நெருக்கம் காட்டுவது ஏன்? புவிசார் அரசியல் மாறுகிறதா?

Related News

திருப்பி அடிக்கும் கர்மா – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பரவும் புரட்சித் தீ : கதிகலங்கி நிற்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுடன் நெருங்கும் ஆஃப்கன் : புலம்பி தவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

உதயநிதியை ரிமாண்ட் செய்யும் எண்ணம் இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

ஆடிப்பெருக்கு விழா – காரைக்குடி பதினெட்டாம்படி கருப்பர் கோயிலில் கிடா விருந்து – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு – உதயநிதி ஸ்டாலின் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னை பெரியமேட்டில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – மர்ம நபர்கள் தப்பியோட்டம்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்துவிடுவேன் என்று மிரட்டி 40 லட்சம் பணம் பறித்ததாக குற்றச்சாட்டு – பரங்கிமலை காவல் ஆய்வாளர் புஹாரி கைது!

இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது – அனந்த நாகேஸ்வரன்

உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

திருப்பரங்குன்றம் தீப வழக்கு – மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் விண்ணில் பாய காத்திருக்கும் இரு செயற்கைகோள்கள்!

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 38 ஆக உயர்த்தும் மசோதா – மக்களவையில் நிறைவேற்றம்!

எச்சரிக்கை மணி அடிக்கும் ஸ்பெயின் ஊடுருவல் பிரச்னை : அகதிகள் சிக்கலை இந்தியா எதிர்கொள்வது எப்படி? – சிறப்பு தொகுப்பு!

பழனி கோயில் நில மோசடி விவகாரம் – மேலும் இருவர் சஸ்பெண்ட்!

காவலர் தேர்வில் குளறுபடி; தேர்வர்கள் போராட்டம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies