காலிஸ்தானுக்கே ஆதரவு!: சிறையிலிருக்கும் சீக்கிய எம்பி கருத்தால் சர்ச்சை!
Sep 19, 2026, 12:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காலிஸ்தானுக்கே ஆதரவு!: சிறையிலிருக்கும் சீக்கிய எம்பி கருத்தால் சர்ச்சை!

Murugesan M by Murugesan M
Jul 9, 2024, 08:55 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

காலிஸ்தான் பிரிவினைவாத நாடாளுமன்ற உறுப்பினர் அம்ரித்பால் சிங், தம்மை காலிஸ்தான் கொள்கை கொண்டவர் அல்ல என்று கூறியதற்காக தனது தாயை விமர்சித்திருக்கிறார். குடும்பத்தை விடவும் காலிஸ்தானே தனக்கு முக்கியம் என்று அவர் கூறியிருப்பது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த ஒரு செய்தி தொகுப்பு.

காலிஸ்தான் பிரிவினைவாதியான அம்ரித்பால் சிங், இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டு வந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது. காலிஸ்தான் இயக்கத்தில் ஈடுபட்டதற்காக அவர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் (என்எஸ்ஏ) கீழ் வழக்கு பதிவு செய்யப் பட்டது.

அதன் தொடர்ச்சியாக, நீண்ட காலம் தலைமறைவாக இருந்த அம்ரித்பால் சிங், பஞ்சாப் மாநில அரசால் கைது செய்யப்பட்டார். அஸ்ஸாமில் உள்ள திப்ருகர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அம்ரித்பால் சிங், சிறையில் இருந்தபடியே மக்களவை தேர்தலில் பஞ்சாபின் கதூர் சாஹிப் தொகுதியில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார்.

பஞ்சாப் மாநிலத்துக்குள் செல்ல கூடாது, ஊடகங்கள் உட்பட யாருடனும் தொடர்பு கொள்ளக்கூடாது போன்ற பல நிபந்தனைகளுடன் நீதிமன்ற உத்தரவின் பேரில், மக்களவை உறுப்பினராக பதவியேற்பதற்காக நான்கு நாட்கள் பரோலில் விடுவிக்கப்பட்டார். பதவியேற்பு விழாவுக்காக டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர், பதவியேற்ற உடனேயே மீண்டும் திப்ருகர் சிறைக்கு அனுப்பப்பட்டார்.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை, அம்ரித்பால் சிங்கின் தாயார் பல்விந்தர் கவுர், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அம்ரித்பால் சிங் ஒரு காலிஸ்தான் இயக்க ஆதரவாளர் அல்ல என்றும், அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அம்ரித்பால் சிங்கின் தாயார் பல்விந்தர் கவுர் தெரிவித்த இந்த கருத்துக்கள் பரபரப்பாக பேசப் பட்டது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், அம்ரித்பால் சிங்குக்கு ஆதரவு திரட்டிய மற்றும் அவருக்கு வாக்களித்த காலிஸ்தான் ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தனது தாயாரின் காலிஸ்தான் விரோத கருத்துக்கு, சிறையிலிருக்கும் அமிர்தபால் சிங் மறுப்பு தெரிவித்திருக்கிறார்.

தனது தாயை விமர்சித்து அம்ரித்பால் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், கல்சா ராஜ் கனவு காண்பது குற்றம் அல்ல, என்றும் அது பெருமைக்குரியது என்றும் கூறியிருக்கிறார்.

மேலும், லட்சக்கணக்கான சீக்கியர்கள் தங்கள் உயிர்களை தியாகம் செய்த பாதையில் இருந்து பின்வாங்குவது பற்றி நினைத்துக்கூட பார்க்க முடியாது என்றும், சீக்கியர்கள் சமரசம் செய்துகொள்வதைப் பற்றி ஒருபோதும் நினைக்க வேண்டாம் என்றும் தெரிவித்திருக்கிறார்.

இதனையடுத்து, அமிர்த் பால் சிங்கின் தாயார், தாம் சொன்னதை ஊடகங்கள் திரித்து வெளியிட்டு விட்டதாக குற்றஞ்சாட்டி உள்ளார். ஊடகங்கள் உண்மைகளைத் தவறாக சித்தரிப்பதையே வழக்கமாக கொண்டிருக்கின்றன. எனவே, காலிஸ்தான் ஆதரவாளர்கள் தனது பேச்சை வேறுவிதமாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

Tags: Support for Khalistan!: Controversy over the opinion of the imprisoned Sikh MP!
Share
Tweet
SendShare
Previous Post

பிரான்ஸ் தேர்தல் இடதுசாரி வெற்றி வெடித்தது வன்முறை!

Next Post

ரஷ்யாவுடன் இந்தியா நெருக்கம் காட்டுவது ஏன்? புவிசார் அரசியல் மாறுகிறதா?

Related News

கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது ஒவ்வொெரு குடிமகனின் பொறுப்பு : ஆளுநர் அர்லேகர்

அரிசி விலை 25 முதல் 30 % உயர்வு – 26 கிலோ பொன்னி அரிசி ரூ.1, 800க்கு விற்பனை!

இன்றைய தங்கம் விலை!

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாருடன் அசிம் முனீர் ரகசிய சந்திப்பு?

சிவகங்கை இரட்டை கொலை வழக்கு : மேலும் 5 பேர் கைது!

நமது மரபணுவில் தர்மம் உள்ளது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

Load More

அண்மைச் செய்திகள்

HAL நிறுவனத்தில் தயாரான FOC LCA  உள்ளிட்ட 3 பயிற்சி விமானங்கள் – விமானப்படையிடம் ஒப்படைப்பு!

பயங்கரவாத ஆதரவு காரணமாக தமிழகத்துக்கு பேராபத்து ஏற்படும் – இந்து முன்னணி எச்சரிக்கை!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை – அன்புமணி அறிவிப்பு!

டெல்லியில் நிர்மலா சீதாராமன் தலைமையில் நிதியமைச்சர்கள் மாநாடு – மரிய வில்சன் பங்கேற்பு!

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்; செப்.22ல் தொடங்கி வைக்கும் முதலமைச்சர்

தாய்மாமன் தங்க மோதிரம் சிறப்பு நலத்திட்டம்; செ.28ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஜோசப் விஜய்

ஈரான் போரால் பெரும் இழப்பு : முதன்முறையாக உண்மையை ஒப்புக்கொண்ட பென்டகன் – சிறப்பு தொகுப்பு!

திருப்பூரில் ஆகஸ்ட் மாத ஆடை ஏற்றுமதி ரூ.11,463 கோடியாக உயர்வு!

சென்னையில் இருந்து கொண்டு செல்லப்பட்ட திருக்குடைகள் : திருமலை தேவஸ்தான நிர்வாகத்திடம் ஒப்படைப்பு!

திருப்பூரில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் கோலாகலம் – 1,100 சிலைகள் கரைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies