தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் மரக்கிளையில் இருந்த ராஜநாகத்தை தீயணைப்புத்துறையினர் பாதுகாப்பாக மீட்டனர்.
அப்பகுதியில் உள்ள மரம் ஒன்றில் 12 அடி நீளம் கொண்ட ராஜ நாகம் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பாம்பை பிடித்தனர்.
பாம்பு பாதுகாப்பாக பிடித்த தீயணைப்புத்துறையினருக்கு சுற்றுலாப்பயணிகள் பாராட்டு தெரிவித்தனர்.