உதகை ரேஸ்கிளப்புக்கு சீல் வைத்த சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உதகையில் உள்ள மெட்ராஸ் ரேஸ் கிளப் அரசுக்கு செலுத்த வேண்டிய 822 கோடி ரூபாய் வரி பாக்கியை செலுத்தாததால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ரேஸ் கிளப்புக்கு சீல் வைக்க உத்தரவிட்ட நிலையில், தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ரேஸ் கிளப் மேல்முறையீடு செய்தது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்து உத்தரவிட்டது.