நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்வது வாடிக்கையாக உள்ளது.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 13 மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு சென்ற இலங்கை கடப்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி அவர்களை கைது செய்தனர். மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.