திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே விவசாய நிலத்திற்குள் புகுந்து ஆடுகளை கடித்துக் கொன்ற மர்ம விலங்கை கேமரா பொருத்தி வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
பழைய வாணியம்பாடி பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். இவருக்கு சொந்த நிலத்தில் உள்ள பட்டியில் அடைக்கப்பட்டிருந்த 8 ஆடுகளை மர்ம விலங்கு கொன்றுள்ளது.
இதனையறிந்து அங்கு சென்ற போலீசார் மற்றும் வனத்துறையினர் சிறுத்தை நடமட்டம் உள்ளதா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். மேலும் அப்பகுதியில் 3 கேமராக்களை பொறுத்தியுள்ளனர்.