திருச்சி மாவட்டம், மணப்பாறையில் மூதாட்டியை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.
மணப்பாறையைச் சேர்ந்த கல்யாணி என்பவர், கடந்த 3-ம் தேதி வீட்டில் பிணமாக கிடந்தார். அவர் அணிந்திருந்த 16 சவரன் நகை, 30 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.
இது தொடர்பான வழக்கில் பன்னப்பட்டியைச் சேர்ந்த கேசவன் என்பவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து மூதாட்டியை கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து கேசனவை கைது செய்த மணப்பாறை போலீசார், 3 பேரை தேடி வருகின்றனர்.