தேனி அருகே காட்டு யானை நடமாட்டத்தால் விவசாயிகள் அச்சமடைந்தனர்.
தேவாரம் மலையடிவாரப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தென்னை, மாங்காய், கப்பைக் கிழங்கு, முந்திரி பயிரிடப்பட்டுள்ளது.
இப்பகுதியில் மக்னா காட்டு யானை தாக்கி பலர் உயிரிழந்த நிலையில், தற்போது மீண்டும் காட்டு யானைகள் நடமாட தொடங்கியுள்ளன. இதனால் அச்சமடைந்த விவசாயிகள் மீனாட்சிபுரத்தில் அதிக சத்தம் எழுப்பி யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.