சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக முன்னணி வீரர் தாமஸ் முல்லர் அறிவித்துள்ளார்.
ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
காலிறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் அணியிடம் ஜெர்மனி அணி தோல்வியடைந்தது. இதன் எதிரொலியாக கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஜெர்மனி அணியின் பிரபல கால்பந்து வீரர் டோனி க்ராஸ் அறிவித்தார்.
இவரைத்தொடர்ந்து முன்னணி வீரரான தாமஸ் முல்லரும் சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.