ஆடி திருமஞ்சன விழாவை முன்னிட்டு சிதம்பரம் நடராஜர் கோயிலில் தேரோட்ட விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
முன்னதாக நடராஜர் சிவகாமசுந்தரி உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
இதையடுத்து சுவாமிகள் தனித் தனி தேர்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். பின்னர் மேளதாளம் முழங்க மாட வீதிகளில் திருத்தேர் வலம் வந்தது. அப்போது தேரை வடம் பிடித்து இழுத்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.