சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக கர்நாடகத்தில் 56 இடங்களில் ஊழலுக்கு எதிரான லோக் அயுக்தா அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
கர்நாடகத்தில் கலபுர்கி, சித்ரதுர்கா, தார்வாட், பெலகாவி, கோலார், மைசூரு, ஹாசன் உள்ளிட்ட மாவட்டங்களில் நிர்வாக பொறியாளர்கள், வட்டாட்சியர்கள், துறை செயலர்கள் என உயர் அதிகாரிகளுக்குச் சொந்தமான 56 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது.
ஓய்வுபெற்ற அதிகாரிகளின் வீடுகளிலும் போலீஸ் பாதுகாப்புடன் லோக் அயுக்தா அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
ஏற்கெனவே கடந்த மார்ச் மாதம் நூறுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் வீட்டில் இதேபோல சோதனை நடத்தப்பட்டது.
தற்போது மீண்டும் லோக் அயுக்தா அதிகாரிகள் சோதனை நடத்தியது அதிகாரிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.