அசாமில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 84 ஆக அதிகரித்துள்ளது.
அஸ்ஸாமின் நாகோன் மாவட்டத்தில் ஒரு வாரமாக கனமழை பெய்து வந்தது. இதனால் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது.
வெள்ளப் பெருக்கில் சிக்கி இதுவரை 84 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.