கேரள மாநிலம் கொச்சியில் சாலையில் சென்றுகொண்டிருந்த பள்ளிப் பேருந்து தீப்பிடித்து எரிந்தது.
கூடனூர் சந்திப்பில் சென்றுகொண்டிருந்த பேருந்து திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. பேருந்தில் இருந்து புகை வருவதைக் கண்ட ஓட்டுநர் உடனடியாக கீழே குதித்தார்.
இதுகுறித்து தகவலறிந்து சென்ற தீயணைப்புத்துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பேருந்தில் மாணவர்கள் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.