மதுரை- ராமேஸ்வரம் இடையே ரயில் இன்ஜின் சோதனை ஓட்டத்தின் போது இன்ஜின் மோதி 2 வடமாநில இளைஞர்கள் உயிரிழந்தனர்.
புளியங்குளம் மேம்பாலம் கீழே ரயில்வே தண்டவாளத்தில் மதுரை-ராமேஸ்வரம் இடையே ரயில் இன்ஜினின் சோதனை ஓட்டம் நடைபெற்றது.
அப்போது ரயில்வே தண்டவாளத்தில் நடந்து சென்றுகொண்டிருந்த 2 வடமாநில இளைஞர்கள் மீது இஞ்ஜின் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.