அனைத்துக் குடிமக்களுக்கு தரமான வாழ்க்கையை அளிக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும்! - பிரதமர் மோடி
Jan 20, 2026, 09:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அனைத்துக் குடிமக்களுக்கு தரமான வாழ்க்கையை அளிக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும்! – பிரதமர் மோடி

Murugesan M by Murugesan M
Jul 12, 2024, 03:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உதவி செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள 2022-ம் ஆண்டு தொகுப்பின் ஐஏஎஸ் பயிற்சி அதிகாரிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

புதுதில்லியில் உள்ள சுஷ்மா சுவராஜ் பவனில், பல்வேறு  அமைச்சகங்கள், துறைகளின் உதவிச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள 2022-ம் ஆண்டு தொகுப்பைச் சேர்ந்த 181 ஐஏஎஸ் பயிற்சி அதிகாரிகளுடன் பிரதமர்  நரேந்திர மோடி இன்று கலந்துரையாடினார்.

இந்த கலந்துரையாடலின் போது, இவர்கள் பயிற்சி மேற்கொண்ட காலத்தின் அனுபவங்களை அதிகாரிகள் பகிர்ந்துகொண்டனர்.

2022-ம் ஆண்டில் ஆராரம்ப் நிகழ்வின் போது அவர்களுடன் தாம் கலந்துரையாடியதைப் பிரதமர் நினைவு கூர்ந்தார்.

உதவிச் செயலாளர் நிகழ்வு பற்றி பேசிய பிரதமர் மோடி,

நிர்வாகப் பிரமிடில் மேலிருந்து கீழ்வரை இளம் அதிகாரிகளுக்கு  அனுபவக் கற்றலின் வாய்ப்பை வழங்குவது உதவிச் செயலாளர் நிகழ்வின் பின் உள்ள  நோக்கமாகும் என்றார்.

விருப்பமில்லாத  அணுகுமுறையில் இந்தியா திருப்தி அடையவில்லை என்றும், ஆக்கப்பூர்வமான செயல்பாட்டைக் கோருகிறது என்றும் குறிப்பிட்ட பிரதமர், அனைத்துக் குடிமக்களுக்கும் தங்களால் இயன்ற சிறந்த நிர்வாகத்தையும், தரமான வாழ்க்கையையும் அளிக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றார்.

லட்சாதிபதி சகோதரி, ட்ரோன் சகோதரி, பிரதமரின் வீட்டுவசதித் திட்டம் போன்ற திட்டங்கள் பற்றி பேசிய அவர், இந்தத் திட்டங்களை மேலும் கூடுதலாக மக்களிடம் கொண்டு செல்ல செறிவான  அணுகுமுறையுடன் அனைவரும் பணியாற்ற வேண்டும் என்று கூறினார்.

சமூக நீதியை உறுதிசெய்யவும், பாகுபாட்டை தடுக்கவும், செறிவான அணுகுமுறை உதவும் என்றும் அவர் கூறினார். சேவை வழங்குவதில் வேகத்தடைகளாக இருக்கப்போகிறீர்களா அல்லது அதிவேக நெடுஞ்சாலையாக இருக்கப்போகிறீர்களா என்பது இப்போது உங்களின் தெரிவுதான் என்று அவர் தெரிவித்தார்.

தங்களின் கண்களுக்கு முன்னால் நிகழும் மாற்றங்களைக் காணும்போது கிரியா ஊக்கிகளாக இருக்கவும், திருப்தி அடையவும் விருப்பம் கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.

தேசம் முதலில் என்பது வெறும் முழக்கம் அல்ல என்றும், தமது வாழக்கையின் நோக்கம் என்றும் கூறிய பிரதமர் இந்தப் பயணத்தில் தம்முடன் அனைத்து அதிகாரிகளும் இணைய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

ஐஏஎஸ் அதிகாரியாக தேர்வான பின் அவர்கள் பெற்ற பாராட்டுகள் கடந்த கால விஷயம் என்று கூறிய பிரதமர் கடந்த காலத்தில் மூழ்கியிருப்பதற்கு பதிலாக அவர்கள் எதிர்காலத்தை நோக்கி முன்னேற வேண்டும் என்று கூறினார்.

இந்தக் கலந்துரையாடல் நிகழ்வின் போது, ஊழியர் நலத்துறை இணையமைச்சர்  ஜிதேந்திர சிங், பிரதமரின் முதன்மைச் செயலாளர்  பி.கே. மிஸ்ரா, அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கௌபா, உள்துறை, ஊழியர், பயிற்சித்துறை செயலாளர்  ஏகே பல்லா மற்றும் மூத்த அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags: Efforts should be made to provide quality life to all citizens! - Prime Minister Modi
ShareTweetSendShare
Previous Post

அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி பாஜக சார்பில் மனு!

Next Post

பிம்ஸ்டெக் வெளியுறவு அமைச்சர்கள் பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு

Related News

இஸ்லாமிய நேட்டோவிற்கு பதிலடியாக இந்தியா அமைக்கும் புதிய கூட்டணி!

கிரீன்லாந்துக்கு அதிர்ச்சி – ஐரோப்பாவுக்கு நெருக்கடி தரும் அமெரிக்கா!

காசியின் முக்கிய சின்னம் மணிகர்ணிகா படித்துறையில் நடப்பது என்ன? – சிறப்பு தொகுப்பு!

“இந்தியாவை மட்டும் குறிவைத்து அமெரிக்கா தடைகளை விதிப்பது நியாயமல்ல” – வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சத்துணவு ஊழியர்கள் போராட்டம்

“விஜய்க்கு நடிகர் சங்கம் தானாக உதவி செய்யாது” – குஷ்பு

Load More

அண்மைச் செய்திகள்

“கட்சி விவகாரத்தில் நிதின் நபின்தான் எனக்கு பாஸ்; நான் பாஜகவின் தொண்டன்” – பிரதமர் மோடி

திருப்பரங்குன்றம் விவகாரத்தை சுட்டிக்காட்டி பேசிய நிதின் நபின்!

பெண் சுற்றுலா பயணியர் பாதுகாப்பை உறுதி செய்யும் மத்திய அரசின் திட்டம் – புறக்கணிக்கும் தமிழக அரசு

சிங்கம்புணரியில் இன்ஸ்டா பிரபலம் புத்தூர் பாண்டி அதிரடி கைது!

7 மாத கர்ப்பிணி மீது திமுக பிரமுகர் தாக்குதல் – திருவள்ளூரில் அதிர்ச்சி!

மனவளர்ச்சி குன்றிய இளம்பெண் காணாமல்போன வழக்கு – காவல்துறை மீது தாய் குற்றச்சாட்டு!

மதுரை LIC அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்ட விவகாரம் – விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்

பேரவையில் ஆளுநர் உரை என்ற நடைமுறையை நீக்க நடவடிக்கை – முதல்வர் ஸ்டாலின்

பாஜக தேசிய தலைவராக நிதின் நபின் தேர்வு – பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

இந்தியாவை மட்டும் குறிவைத்து அமெரிக்கா தடைகளை விதிப்பது நியாயமல்ல – எஸ்.ஜெய்சங்கர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies