பெரம்பலூரில் உலக மக்கள்தொகை தினத்தையொட்டி நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதில் 300க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் பங்கேற்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் பதாகைகளை ஏந்திச் சென்றனர்.
அதனைத்தொடர்ந்து நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் சான்றிதழ்களை வழங்கினார்.