கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானைகளை வனத்துறையினர் விரட்டினர்.
வெங்கனூர் பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள், அடிக்கடி வனவிலங்குகள் அச்சுறுத்தலுக்கு ஆளாகி வருகின்றனர்.
இந்நிலையில், காட்டு யானைகள் திடீரென கூட்டமாக ஊருக்குள் சென்றதால், பொதுமக்கள் பீதியடைந்தனர்.
இதையடுத்து அங்கு சென்ற வனத்துறையினர் யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.