அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மில்வாக்கியில் இன்று நடைபெறவுள்ள குடியரசு கட்சியின் மாநாட்டில் கலந்து கொள்கிறார்.
அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, முன்னாள் அதிபர் ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. காதில் குண்டு பாய்ந்த நிலையில் நூலிழையில் அவர் உயிர் தப்பினார்.
இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சில மணி நேரத்திலேயே டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்நிலையில், மில்வாக்கியில் இன்று நடைபெறும் குடியரசு கட்சியின் மாநாட்டில் ட்ரம்ப் பங்கேற்கவுள்ளார்.
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் தனது பயணத்தில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும், மில்வாக்கியில் இன்று நடைபெறும் குடியரசு கட்சியின் மாநாட்டில் திட்டமிட்டபடி பங்கேற்கவுள்ளதாகவும் ட்ரம்ப் தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ளார். மாநாட்டில் பங்கேற்பதற்காக ட்ரம்ப் மில்வாக்கி சென்ற காட்சிகள் வெளியாகியுள்ளன.