ஆழ்கடலில் மீன் குஞ்சுகளை அழிக்கும் இரட்டைமடி வலை மற்றும் பவளப்பாறைகளை அழிக்கும் காச்சா மூச்சா வலைகளை தடை செய்ய வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் ராமன் துறை மீனவ கிராமத்தில் மீனவர்களின் 7 -ஆவது மாவட்ட மாநாடு நடைபெற்றது. அப்போது, மீனவ மற்றும் மீனவ கூட்டுறவு சங்கங்களில் ஓய்வு பெறும் உறுப்பினர்களுக்கு ஓய்வு ஊதிய திட்டம் அமல் படுத்தவேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக, இனையம் பகுதியில் இருந்து ராமன் துறை வரைக்கும், மீனவர்கள் பங்கேற்ற பிரமாண்ட பேரணி நடைபெற்றது. இதில், ஏராளமான மீனவர்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.