மதுரையில், இளைய பாரதம் சேவா அறக்கட்டளை மற்றும் அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் சார்பில் இலவச பொது மருத்துவ முகாமின் 26-ஆம் ஆண்டு துவக்க விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
ABVP -யின் முன்னாள் மாநில தலைவர் பேராசிரியர் கே.ஆர்.பரமசிவம் நினைவாக இலவச பொது மருத்துவ முகாம் வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
இந்நிலையில், இலவச பொது மருத்துவ முகாமின் 26-ஆம் ஆண்டு துவக்க விழா மதுரையில் உள்ள ABVP அலுவலகத்தில் நடைபெற்றது. முகாம் பொறுப்பாளர் கார்த்திக் பாபு வரவேற்புரையாற்றினார்.
பின்னர் திருவிளக்கு ஏற்றி இலவச பொது மருத்துவ முகாம் துவக்கி வைக்கப்பட்டது. முகாம் பொறுப்பாளர் கோபிநாத், இலவச மருத்துவ முகாம் கடந்து வந்த பாதைகள் குறித்து விவரித்தார்.
இந்நிகழ்ச்சியில், மகாலட்சுமி, பாலசுப்ரமணியம், மருத்துவர் ஜெய் பிரவீன், மருத்துவர் நாகலெட்சுமி, ஆடிட்டர் சப்தரிஷி மற்றும் ABVP நிர்வாகிகள் பலர் பங்கேற்று சிறப்பித்தனர். முன்னதாக இந்த மருத்துவ முகாமில் ஏராளமானோர் பங்கேற்று சிகிச்சை பெற்று பயனடைந்தனர்.