தமிழகத்திற்கு வரும் 31-ம் தேதி வரை தினமும் 8,000 கன அடி நீர் வழங்க கர்நாடகா அரசு முடிவு செய்துள்ளது.
தமிழகத்திற்கு தினமும் ஒரு டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும் என கர்நாடகாவுக்கு காவிரி ஒழுங்காற்றுக்குழு உத்தரவிட்டது.
ஆனால், தண்ணீர் தர முடியாது என கர்நாடகா மாநில முதல்வர் சித்தராமையா திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். இந்நிலையில், கர்நாடகா முதல்வர் சித்தராமையா தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் பெங்களூருவில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் இருந்து தினமும் வினாடிக்கு 8,000 கன அடி நீர் திறந்துவிட முடிவு செய்யப்பட்டது. அதன்படி வரும் 31-ம் தேதி வரை தினமும் தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.