தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் விசிக பிரமுகர் வீட்டில் பதுங்கியிருந்த 4 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.
கும்பகோணம் பேருந்து நிலையம் அருகே நின்றுகொண்டிருந்த நபர் மீது தாக்குதல் நடத்தியதாக 4 பேரை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் அதே பகுதியில் உள்ள விசிக பிரமுகர் அலெக்ஸ் என்பவரது வீட்டில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீசார் சோதனை மேற்கொண்டபோது அவரது வீட்டில் 4 ரவுடிகளும் பதுங்கியிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதனையடுத்து 4 பேரையும் கைது செய்த போலீசார் வீட்டில் இருந்த ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர்.