ஆந்திராவில் இருந்து துபாய்க்கு வேலைக்கு சென்று அங்கு சிக்கித் தவிக்கும் கூலித்தொழிலாளியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சித்தூர் மாவட்டம் ராயலப்பாடு கிராமத்தை சேர்ந்தவர் சிவா. கூலித் தொழிலாளியான இவர் குடும்ப சூழல் மற்றும் கடன் தொல்லையால் துபாய்க்கு வேலைக்கு சென்றுள்ளார்.
சுமார் 2 லட்சம் ரூபாய் செலவு செய்து துபாய் சென்ற இவரை, ஆடு, மாடுகளை மேய்க்கும் தொழிலுக்காக பாலைவனத்தின் நடுவில் கொண்டு விடப்பட்டுள்ளார்.
தனிமையிலும் வாடி வருவதை வீடியோவாக வெளியிட்டுள்ள அவர், தன்னை சொந்த ஊருக்கு அழைத்துச் செல்லுமாறு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெலுங்கு தேசம் கட்சி தேசிய பொதுச்செயலாளர் நாரா லோகேஷ் தெரிவித்துள்ளார்.
















