மகளிர் ஆசிய கிரிக்கெட் கோப்பை தொடரில் இருந்து இந்திய வீராங்கனை ஸ்ரேயங்கா பாட்டீல் விலகியுள்ளார்.
இலங்கையில் நடைபெற்று வரும் இந்த தொடரின் முதல் ஆட்டத்தில், பாகிஸ்தானை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிரணி வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தின்போது இந்திய வீராங்கனை ஸ்ரேயங்கா பாட்டீலுக்கு கைவிரலில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதனால் எஞ்சிய தொடரில் இருந்து அவர் விலகுவதாக அறிவித்துள்ளார். இவருக்கு பதில் தனுஜா கன்வர் மாற்று வீராங்கனையாக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.