புதுச்சேரியில் பட்டப்பகலில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருடி செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
தந்தை பெரியார் நகரைச் சேர்ந்த ரவிசந்திரன் என்பவர், தனது வீட்டின் முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, திரும்பி வந்து பார்த்தபோது காணவில்லை.
இது குறித்த புகாரின் பேரில், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
அதில், இருசக்கர வாகனத்தில் வந்த இருவரில் ஒருவர் அவரது வாகனத்தை திருடிய நிலையில், இன்னொரு வாகனத்தை கொண்டு tow செய்து திருடி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.