மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில், டெல்லியில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.
மக்களவை தேர்தலை முன்னிட்டு, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த பிப்ரவரி மாதம் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
மத்தியில் புதிய அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, மழைக்கால கூட்டத்தொடரில் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது.
நாளை தொடங்கும் கூட்டத்தொடர், ஆகஸ்ட் 12-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. நாளை மறுதினம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
இதனை முன்னிட்டு, கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவதற்காக, மத்திய அரசு அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தது.
காலை 11 மணிக்கு தொடங்கிய இந்தக் கூட்டத்தில், மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ஜெ.பி.நட்டா, கிரண் ரிஜிஜு, எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். திமுக எம்பிக்கள் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா ஆகியோரும் இந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்றனர்.