புதுக்கோட்டையில் தனியார் நிறுவனத்தின் ஆண்டு விழாவை ஒட்டி குதிரை மற்றும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் கோலாகலமாக நடைபெற்றது.
நான்கு பிரிவுகளாகநடத்தப்பட்ட இந்த போட்டியில் இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது.
ஒவ்வொரு போட்டி பிரிவிலும் வெற்றி பெற்ற முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு போட்டியிலும் சீறி பாய்ந்து சென்ற குதிரை மற்றும் மாட்டு வண்டிகளை பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.