ராஜஸ்தான் மாநிலம் திஜாரா கேட் அருகே சரக்கு ரயிலின் 3 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
இதுகுறித்து கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் மணீஷ் கோயல் பேசுகையில், அதிகாலை சுமார் 2.30 மணியளவில் விபத்து நடந்துள்ளதாக தெரிவித்தார்.
சீரமைப்பு பணிகள் விரைவில் முடிக்கப்படும் என்றும், இந்த விபத்தால் முக்கிய வழித்தடங்களில் எந்த பாதிப்பும் இல்லை எனவும் கூறினார்.