மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் காருக்கு வழிவிடாமல் சென்றதாக பெண்ணை தாக்கிய முதியவர் மற்றும் அவருடைய மனைவியை போலீசார் கைது செய்தனர்.
ஜெரலின் டி சில்வா என்ற பெண் இருசக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது பின்னால் காரில் வந்து கொண்டிருந்த முதியவருக்கு ஜெரலின் வழிவிடாமல் சென்றதாகக் கூறப்படுகிறது.
இதில் ஆத்திரமடைந்த முதியவர் காரை நிறுத்தி ஜெரலின் முகத்தில் பலமாக தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த பெண் போலீசில் புகார் தெரிவித்ததை அடுத்து முதியவர் மற்றும் அவரது மனைவி கைது செய்யப்பட்டனர்