திமுக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்!
Oct 11, 2025, 09:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்!

Web Desk by Web Desk
Jul 21, 2024, 01:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திமுக அரசு ஆகம விதிகளை மீறி செயல்படுவதாகவும், கோவில்களை விட்டு இந்து சமய அறநிலையத்துறை வெளியேற வேண்டுமென வலியுறுத்தியும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இந்து முன்னணி சார்பில் போராட்டம் நடைபெற்றது.

சென்னை, எழும்பூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இந்து கோயில்களின் சொத்துக்களை கொள்ளையடித்ததை அமைச்சர் சேகர்பாபு மறைப்பதாக குற்றம் சாட்டி கோஷங்கள் எழுப்பினர். அப்போது அவர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்து முன்னணியின் செய்தி தொடர்பாளர் பசுத்தாய் கணேசன் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி தருவதாக கூறிவிட்டு கடைசி நேரத்தில் இல்லை என தங்களை கைது செய்து வருகிறார்கள். எனவும் திமுக அரசு கோவில் சொத்துகள் பற்றி விவரங்களை வெள்ளை அறிக்கையாக தர வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

திருச்சி மாவட்டம், திருவானக்காவலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இந்து கோயில்களை மட்டும் சீரழிக்கும் திமுக அரசு கோவிலை விட்டு வெளியேற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இந்து முன்னணியின் மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் நிர்வாகிகளை போலீசார் தாக்கினர், இதனால் இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் நூற்றுக்கும் மேற்பட்டவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.

கோவையில், மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் முன்பு இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், இந்து கோவில்களை மட்டும் திட்டமிட்டு தமிழக அரசு வஞ்சிப்பதாகவும் பிற மத வழிபாட்டுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் இந்துக்களுக்கு அளிப்பதில்லை என குற்றம்சாட்டினர்.

கோவை கோட்ட செயலாளர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

அதே போல கோவை பொள்ளாச்சியில் உள்ள புதிய பேருந்து நிலையம் முன்பு இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்து முன்னணி மாநிலச் செயலாளர் அண்ணாதுரை தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் தமிழகத்தில் கோயில்களில் வழிபாட்டு கட்டணத்தை அகற்ற வேண்டும்,
மற்ற மத கோயில்களுக்கு பண்டிகை காலங்களில் நிதி ஒதுக்குவது போல் இந்து கோயில்களுக்கும் நிதி ஒதுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. அப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 70-க்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

Tags: Hindu leaders protest against the DMK government!
ShareTweetSendShare
Previous Post

குரு பூர்ணிமா – பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வாழ்த்து!

Next Post

மக்கள் வாழ்க்கையில் பெரும் பொருளாதாரச் சுமையை ஏற்றிவிட்டது திமுக! – அண்ணாமலை குற்றச்சாட்டு

Related News

இன்றைய தங்கம் விலை!

தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் 50.71 % அதிகரிப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் கூட்டம் – 24 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு – நீர்வரத்து 68,000 கன அடியாக உயர்வு!

திருச்செந்தூர் அருகே ஜாமினில் வந்தவர் வெட்டிக் கொலை!

பட்டுக்கோட்டை அருகே ஆண் நண்பருடன் ஓடிப்போன மனைவி – 3 குழந்தைளை கொன்ற கணவன்!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்க ராணுவ வெடிபொருள் தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து – 19 பேர் மாயம்!

புரட்டாசி கிருத்திகை – திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம்!

அக்டோபர் 16-ம் தேதி முதல் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

தருமபுரி அருகே கனமழை – நீரில் மூழ்கிய பயிர்கள்!

காசா குறித்து பேசும் முதல்வர் சொந்த மக்களுக்கு என்ன செய்யப் போகிறார்? – ஆர்.பி.உதயகுமார்

வழக்கறிஞர் தாக்கப்பட்ட விவகாரத்தில் திருமாவளவனை கைது செய்ய வேண்டும் – ஹெச். ராஜா வலியுறுத்தல்!

சீர்காழி அருகே நீர்நிலைகளில் அரசு அலுவலகங்கள் கட்ட அனுமதி வழங்கிய அதிகாரிகள் – ஒழுங்கு நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு!

பீகார் சட்டப்பேரவை தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

நாட்டை கட்டியெழுப்புவது குடிமக்களின் பொறுப்பு – ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்

முஸ்லிம்களின் மக்கள் தொகை உயர்வுக்கு ஊடுருவலே காரணம் – மத்திய அமைச்சர் அமித் ஷா

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies