திமுக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்!
Jun 23, 2026, 04:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திமுக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்!

Murugesan M by Murugesan M
Jul 21, 2024, 01:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திமுக அரசு ஆகம விதிகளை மீறி செயல்படுவதாகவும், கோவில்களை விட்டு இந்து சமய அறநிலையத்துறை வெளியேற வேண்டுமென வலியுறுத்தியும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இந்து முன்னணி சார்பில் போராட்டம் நடைபெற்றது.

சென்னை, எழும்பூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இந்து கோயில்களின் சொத்துக்களை கொள்ளையடித்ததை அமைச்சர் சேகர்பாபு மறைப்பதாக குற்றம் சாட்டி கோஷங்கள் எழுப்பினர். அப்போது அவர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்து முன்னணியின் செய்தி தொடர்பாளர் பசுத்தாய் கணேசன் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி தருவதாக கூறிவிட்டு கடைசி நேரத்தில் இல்லை என தங்களை கைது செய்து வருகிறார்கள். எனவும் திமுக அரசு கோவில் சொத்துகள் பற்றி விவரங்களை வெள்ளை அறிக்கையாக தர வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

திருச்சி மாவட்டம், திருவானக்காவலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இந்து கோயில்களை மட்டும் சீரழிக்கும் திமுக அரசு கோவிலை விட்டு வெளியேற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இந்து முன்னணியின் மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் நிர்வாகிகளை போலீசார் தாக்கினர், இதனால் இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் நூற்றுக்கும் மேற்பட்டவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.

கோவையில், மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் முன்பு இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், இந்து கோவில்களை மட்டும் திட்டமிட்டு தமிழக அரசு வஞ்சிப்பதாகவும் பிற மத வழிபாட்டுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் இந்துக்களுக்கு அளிப்பதில்லை என குற்றம்சாட்டினர்.

கோவை கோட்ட செயலாளர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

அதே போல கோவை பொள்ளாச்சியில் உள்ள புதிய பேருந்து நிலையம் முன்பு இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்து முன்னணி மாநிலச் செயலாளர் அண்ணாதுரை தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் தமிழகத்தில் கோயில்களில் வழிபாட்டு கட்டணத்தை அகற்ற வேண்டும்,
மற்ற மத கோயில்களுக்கு பண்டிகை காலங்களில் நிதி ஒதுக்குவது போல் இந்து கோயில்களுக்கும் நிதி ஒதுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. அப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 70-க்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

Tags: Hindu leaders protest against the DMK government!
ShareTweetSendShare
Previous Post

குரு பூர்ணிமா – பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வாழ்த்து!

Next Post

மக்கள் வாழ்க்கையில் பெரும் பொருளாதாரச் சுமையை ஏற்றிவிட்டது திமுக! – அண்ணாமலை குற்றச்சாட்டு

Related News

ரூ.340 கோடிக்கு ‘நோ’ சொன்ன முன்னாள் காதலி : எலான் மஸ்க்கை அதிரவைத்த ஆஷ்லி செயிண்ட் கிளேர் – சிறப்பு தொகுப்பு!

ஆபத்தான ரசாயனத்துக்கு ஐரோப்பாவில் தடை : மெல்ல கொல்லும் நஞ்சாகிறதா நமது உணவு? – சிறப்பு கட்டுரை!

பாகிஸ்தான் அரசுக்கு எதிர்ப்பு – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 19-வது நாளாக போராட்டம், நீடிக்கும் பதற்றம்!

பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக மாட்டேன் – துரைமுருகன் முடிவால் திமுகவில் குழப்பம்!

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 2 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

திருவள்ளுர் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு – இருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies