சென்னை, திருவான்மியூரில் நடைபெற்ற குருபூஜை நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ் தேசிய தலைவர் மோகன் பகவத் பங்கேற்றார்.
ஒவ்வொரு ஆடி மாத முதல் பௌர்ணமி நாளன்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சார்பாக குரு பௌர்ணமி என்கின்ற குரு பூஜா நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்ற குருபூஜை நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தேசியத் தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டார். இதில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் புதுச்சேரி முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்