உலக நன்மை வேண்டியும், தொழில் வளம் பெருக வேண்டியும், சென்னை திருவொற்றியூரில் உள்ள தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
ஆடி பௌர்ணமியை முன்னிட்டு, வடிவுடையம்மன் கோயிலில் உற்சவ அம்மனுக்கு வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
பெண்கள் ஒரே நிறத்தில் சேலை அணிந்து வண்ணக் கோலங்கள் இட்டு நீண்ட வரிசையில் மஞ்சள், குங்குமம், தேங்காய் மற்றும் கற்பூரம் உள்ளிட்டவற்றை வைத்து திருவிளக்கேற்றி வழிபட்டனர். கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.