பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஹாக்கி அணி தங்கம் வெல்ல வாழ்த்து தெரிவிக்கும் விதமாக ஹாக்கி வீரர்கள் பேரணி நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் GO FOR GOLD INDIA என்ற தலைப்பில் நடந்த இந்த போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஹாக்கி சங்கங்களை சேர்ந்த ஹாக்கி வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டு ஊர்வலமாக சென்றனர்.
போலீஸ் பரேட் மைதானத்தில் தொடங்கிய இந்த பேரணியை கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன், நகர்மன்ற தலைவர் கருணாநிதி ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.