கடலூர் மாவட்டம் கல்குணம் பகுதியில் வீடுகள் அடுத்தடுத்து தீபிடித்து எரிந்ததால் கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
கல்குணம் பகுதியில் சுமார் 500க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பகுதியில் உள்ள 4க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் வைக்கோல் போர்களுக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர்.
இதுகுறித்து கிராம மக்கள் புகாரளித்த நிலையில் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.