மத்திய அரசின் பட்ஜெட் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதாக அமையும் என நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற அனைத்து கட்சிக் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், அனைவருக்கும் நன்மை அளிக்கக் கூடியதாக பட்ஜெட் திகழும் என நம்பிக்கை தெரிவித்தார்.
பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னிட்டு பொருளாதார ஆய்வு அறிக்கை நாளை தாக்கல் செய்யப்படும் என்று கூறிய அமைச்சர் கிரண் ரிஜிஜு, நாளை மறுதினம் பட்ஜெட் தாக்கலாகும் என்று குறிப்பிட்டார்.
இரு அவைகளின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி, அலுவல் ஆய்வு கமிட்டி மூலம் விவாதங்களுக்கு திறந்த மனதுடன் பதிலளிக்க மத்திய அரசு தயாராக இருப்பதாகவும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறினார்.