உக்ரைன் முன்னாள் எம்பி இரினா ஃபரியோன் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
உக்ரைனில் 2012 ல் எம்பியாக பதவி வகித்த இவர், உக்ரேனிய மொழியை ஊக்குவிப்பதற்காக நடைபெற்ற பிரச்சாரங்களில் முதன்மையாக செயல்பட்டார்.
சில தினங்களுக்கு முன் லைவ் நகரில் மர்ம நபர்களால் சுடப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.